சென்னையில் ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு பணிக்குழு மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பை தற்போது இந்தியா வகித்து வருகிறது. ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம், சர்வதேச உறவுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் முக்கிய நகரங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கல்வி தொடர்பான மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றன.
இந்நிலையில், ஜி-20 கூட்டமைப்பின் 2-வது நிதி கட்டமைப்பு பணிக்குழுவின் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் ஏப்.12, 13-ம் தேதிகளில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறும் ஜி-20 நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.