வங்கிகளுக்கு மார்ச் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31-ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானின் காரணமாக மற்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு மார்ச் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31-ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானின் காரணமாக மற்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகள் மூடப்படும் நாள்களில் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும். அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்பும் பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ. சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.