புதிதாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷியா அதிநியம், பாரதிய நாகரிக் சுரக் ஷா ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்பு டிசம்பர் 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். தற்போது இந்த மூன்று குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.