3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையம்

January 18, 2023

3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 3 மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன.21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி […]

3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 3 மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன.21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. மறுபரிசீலனை ஜனவரி 31-ம் தேதியும், வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 2-ம் தேதியும் கடைசி நாளாகும். இதேபோன்று, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கு பிப்ரவரி 27-ம் தேதியும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu