டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி

January 29, 2024

ஜோர்டானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் ஹமாசுக்கு ஆதரவாக உள்ள போராளிக் குழுக்கள் அமெரிக்கா மீது கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஜோர்டானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். சிரியா எல்லைக்கு அருகில் வடகிழக்கு ஜோர்டானில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. கடந்த சனிக்கிழமை இரவு இந்த […]

ஜோர்டானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர்.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் ஹமாசுக்கு ஆதரவாக உள்ள போராளிக் குழுக்கள் அமெரிக்கா மீது கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஜோர்டானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். சிரியா எல்லைக்கு அருகில் வடகிழக்கு ஜோர்டானில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. கடந்த சனிக்கிழமை இரவு இந்த படைகளை குறிவைத்து அதிரடி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூன்று பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ளார். முதன் முறையாக அமெரிக்க படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜோ பிடென் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படுவதாவது, ஜோர்டானில் அமெரிக்க தளங்களின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று வீரர்கள் பலியாகினர். சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் ஈரான் ஆதரவு போராளி குழுக்களால் இது நடத்தப்பட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu