உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் உள்ள மூன்று கிராமங்கள் ரஷ்ய துருப்புக்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனில் சில பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக
ஒப்புதல் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் பெ௫ம்பான்மையான வாக்குகள் பெற்றதால் ரஷ்யர்கள் கைப்பற்றிய சில உக்ரேனிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் புடின் கையெழுத்திட்டார். இந்நிலையில் உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் பிடியில் இருந்து நோவோவோஸ்கிரெசென்ஸ்கே, நோவோக்ரிகோரிவ்கா மற்றும் பெட்ரோபாவ்லிவ்கா ஆகிய பகுதிகளை உக்ரேனிய படைகள் மீட்டெடுத்ததாக தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்தார். மேலும் உக்ரேனியப் படைகளின் தாக்குதல் தொடர்கிறது என்றும் கூறினார்.