தொலைக்காட்சி சேனல்களில் தேசிய நலன் சார்ந்து 30 நிமிட நிகழ்ச்சி: மத்திய அரசு வலியுறுத்தல்

November 11, 2022

தொலைக்காட்சி சேனல்களில் தேசிய நலன் சார்ந்து 30 நிமிட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலர் அபூர்வ சந்திரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க், டவுன்லிங்க் செய்வதற்கான 2022ம் ஆண்டுகான வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  புதிய திருத்தங்கள் இந்தியாவை உலக அரங்கில் ஒரு விரும்பத்தக்க அப்லிங் சேவைதளமாக முன்னிறுத்தும் என்றார். புதிய சட்டத்திருத்தங்களின்படி இந்தியாவில் இருந்து அப்லிங், டவுன்லிங் செய்ய […]

தொலைக்காட்சி சேனல்களில் தேசிய நலன் சார்ந்து 30 நிமிட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலர் அபூர்வ சந்திரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க், டவுன்லிங்க் செய்வதற்கான 2022ம் ஆண்டுகான வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  புதிய திருத்தங்கள் இந்தியாவை உலக அரங்கில் ஒரு விரும்பத்தக்க அப்லிங் சேவைதளமாக முன்னிறுத்தும் என்றார். புதிய சட்டத்திருத்தங்களின்படி இந்தியாவில் இருந்து அப்லிங், டவுன்லிங் செய்ய விரும்பும் சேனல்கள் இனி அன்றாடம் 30 நிமிடங்களாவது தேசிய முக்கியத்துவம், சமூக பிரச்சினைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும்.

இது பொழுதுபோக்கு சேனல்களுக்கும் பொருந்தும். விளையாட்டு சேனல்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனி ஒரு சேனல் ஒன்றுக்கும் மேற்பட்ட டெலிபோர்ட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் சேனல்கள் தங்களின் சிக்னல்களை என்க்ரிப்ட் செய்து கொள்வது கட்டாயமாக்கப்படுகிறது. செய்தி சேனல்கள் அல்லாத பிற சேனல்கள் நேரலையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும் போன்ற பல்வேறு திருத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu