அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3000 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என மத்திய ரயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே தற்போது ஆண்டுக்கு 800 கோடி பயணிகளை சுமந்து செல்கிறது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 கோடியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் 3 ஆயிரம் கூடுதல் ரயில்கள் நமக்கு தேவைப்படும் இது பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணங்களை மேற்கொள்ளும் வகையில் இருக்கும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் ரயில்களின் பயண நேரத்தை குறைப்பதும் மற்றொரு இலக்கு எனவும், அனைத்து ரயில் தடங்களிலும் வந்தே பாரத் இரயில் அறிமுகம் செய்வதற்கு அதிக நேரமம் ஆகும் என்பதால் தற்போதைய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்