சென்னை விமான நிலையத்தில் 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருவதால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. 2வது நாளாக இன்றும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், தூத்துக்குடி என 19 விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவில் இருந்து சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 14 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன. நேற்று முதல் சென்னை விமான நிலையத்தில் 33 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. இதில் பெரும்பாலான விமானங்கள் சிறிய ரக ஏ.டி.ஆர். விமானங்கள் என்றும் புயல் காற்றின் போது இந்த விமானங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் என்பதால் சேவை நிறுத்தப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.