அசாமில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. கிராமங்கள், நகரங்கள், விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வியாழக்கிழமை வரை மாநிலத்தின் பல்வேறு மாாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனக் கணித்துள்ளது.
வெள்ளம் காரணமாக ஆசாமி கச்சார், டர்ராங், திமாஜ், திப்ருகர், கோல்கட், ஹோஜாய், லக்கிம்பூர், நாகான், நல்பாரி, சோனிட்பூர், டின்சுகியா மற்றும் உடல்குரி மாவட்டங்களில் 33,400க்கும் அதிமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் லக்கிம்பூர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 142 கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 1,510.98 ஹெர்டர் பரப்பளவிலான பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.