பஞ்சாப் உட்பட மூன்று மாநிலங்களில் தாதா கும்பலைச் சேர்ந்தவர்களின் வீடுகளில், தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது.
டில்லி, மும்பை விரைவு ரயில்கள் இனி 130 கி.மீ. வேகத்தில் செல்லும்.
தெலுங்கானாவில் இ-ஸ்கூட்டர் சார்ஜிங் பிரிவு ஒன்றின் தரை தளத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 8 பேர் பலி.
இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் பிராண வாயு பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி அரசு தணிக்கை செய்ய வேண்டுமென நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரை.
ஐக்கிய ஜனதா தளத்தின் டையூ டாமனுக்கான பிரிவில் இருந்து 15 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் பா.ஜ.க.வில் இணைந்தது நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.