கடந்த 2020 மே முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், ஆப்பிரிக்க நாடுகளில் 350 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இந்த சம்பவம் விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்தது. இது தொடர்பான ஆராய்ச்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இறுதியில், Pasteurella bisgaard taxon 45 என்ற அரிய வகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு யானைகள் உயிரிழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.போட்ஸ்வானா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் இந்த யானை உயிரிழப்பு சம்பவங்கள் நேரிட்டன. இறந்த யானைகள் உடலில் எவ்வித வெளி காயங்களும் இல்லாமல் இருந்தது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, ரத்தத்தில் விஷம் கலந்து யானைகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது, யானைகளை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, ஆப்பிரிக்க யானைகள் அழிவு நிலையில் உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.