நாசாவின் 38 வருட பழமையான செயற்கைக்கோள், நாளை பூமியில் விழுகிறது

கடந்த 1984 ஆம் ஆண்டு, சேலஞ்சர் விண்கலத்தின் மூலம், தி எர்த் ரேடியேஷன் பட்ஜெட் சேட்டிலைட் - ERBS நாசாவால் விண்ணில் ஏவப்பட்டது. வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே செயல்படும் என்று கணிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், 2005 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. ஓசோன் மற்றும் இதர வளிமண்டல அளவீடுகள் குறித்த முக்கிய விவரங்களை இந்த செயற்கைக்கோள் பகிர்ந்துள்ளது. இந்நிலையில், 38 வயதான இந்த செயற்கைக்கோள், பூமியில் விழ உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. “இந்த செயற்கைக்கோளின் எடை […]

கடந்த 1984 ஆம் ஆண்டு, சேலஞ்சர் விண்கலத்தின் மூலம், தி எர்த் ரேடியேஷன் பட்ஜெட் சேட்டிலைட் - ERBS நாசாவால் விண்ணில் ஏவப்பட்டது. வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே செயல்படும் என்று கணிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், 2005 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. ஓசோன் மற்றும் இதர வளிமண்டல அளவீடுகள் குறித்த முக்கிய விவரங்களை இந்த செயற்கைக்கோள் பகிர்ந்துள்ளது. இந்நிலையில், 38 வயதான இந்த செயற்கைக்கோள், பூமியில் விழ உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

“இந்த செயற்கைக்கோளின் எடை 2450 கிலோகிராம் ஆகும். இது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது, பெரும்பாலும் எரிந்து விடும். எனினும், சில பாகங்கள் கீழே விழலாம்” என நாசா எச்சரித்துள்ளது. ஆனால், இதன் பாகங்கள் பூமியில் விழும் பொழுது பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் நேராது எனவும் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த செயற்கைக்கோள் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது விழக்கூடிய துல்லியமான நேரம் வெளியிடப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu