சூடான் உள்நாட்டு போரால் இதுவரை சுமார் 48 லட்சம் பேர் தங்களது சொந்த இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.தெரிவித்துள்ளது.
சூடானில் ராணுவத்தினருக்கும் ஆர் எஸ் எஸ் எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கலவரம் வெடித்தது. கடந்த மாதம் வரை இந்த உள்நாட்டு போரில் சுமார் 3,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பு காரணமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில், சூடான் உள்நாட்டு போரால் இதுவரை சுமார் 48 லட்சம் பேர் தங்களது சொந்த இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.