எத்தியோப்பியாவில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, அவாஷ் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.9 அலகுகளாக பதிவானது. தலைநகர் ஏடிஸ் அபாபா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அவசரமாக வெளியேறினர். இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதற்கான உடனடி தகவல்கள் கிடைக்கவில்லை.














