உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் பலியாகினர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது கார்கிவ் நகரை நோக்கி ரஷ்யா 15-க்கும் மேற்பட்ட ஷகித்ரக ட்ரோன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றில் சில ட்ரோன்கள் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கொண்டு இடைமறித்து அழைக்கப்பட்டன. எனினும் பிற டோன்கள் இலக்குகளை தாக்கின. அவற்றில் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தை சேதப்படுத்தியது. அதையடுத்து அந்தப் பகுதிக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே இடத்தில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் மீட்பு குழுவை சேர்ந்த மூன்று பெயர் பலியாகினர். மேலும் 14 அடுக்கு குடியிருப்பில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
சமீப காலமாக கார்கிவ் நகரை ரஷ்யா கடுமையாக தாக்கி வருகிறது. அது ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு எரிசக்தி கட்டமைப்பை குலைப்பதற்காக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ரஷ்யா வீசி வருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர் என்று தகவல்கள் வந்துள்ளது.