சி - விஜில் செயலி மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதில் நடத்தை விதி மீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் தேர்தல் நடத்த விதிமுறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க சி - விஜில் என்ற செல்போன் செயலியை அறிவித்திருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 4.24 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதில் 409 புகார்கள் விசாரணையில் உள்ளது