சென்னையில் வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதில் சென்னையில் வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வட சென்னையில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதில் லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் நகர்ப்புறங்களில் பொதுமறை விடுமுறை அளிக்கப்பட்டாலும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்திய புதிலும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக தேர்தல் நடத்தை அலுவலர் கூறியுள்ளார்.