பாஜகவில் 4 மாநில தலைவர்களை மாற்றம் செய்து ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி டெல்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். பாஜகவின் டெல்லி மாநில தலைவராக வீரேந்திர சச்தேவா, பீகார் மாநில தலைவராக பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சாம்ராட் சௌத்ரி, ராஜஸ்தான் மாநில தலைவராக . ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.பி சிபி ஜோஷி, பாஜகவின் ஒடிசா மாநில தலைவராக முன்னாள் மாநில அமைச்சரான மன்மோகன் சமல் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.