அபுதாபியைச் சேர்ந்த சையத் ரஷித் அல் மெய்ரி என்ற 4 வயது சிறுவன், 218 நாட்களில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளான். மேலும், ‘மிகவும் இள வயதில் புத்தகம் வெளியிட்ட ஆண்’ என்ற பிரிவில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறுவன், ‘எலிபன்ட் சையத்தும் கரடியும்’ என்ற பெயரில் சிறார்களுக்கான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளான். இரு விலங்குகளுக்கு இடையே ஏற்படும் எதிர்பாராத நட்பு மற்றும் இரக்க குணம் பற்றிய கதையை மையமாகக் கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9ம் தேதி வெளியான இந்த புத்தகம், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனைகளை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிறுவன் சையத் ரஷீத் கூறுகையில், “இந்த புத்தகத்தை எழுதியதற்கு என் மூத்த சகோதரி அல்தாபி பக்கபலமாக இருந்தார். நான் என் சகோதரியுடன் ஒன்றாக விளையாடுவதை, படிப்பதை, எழுதுவதை, வரைவதை நேசிக்கிறேன். அவளால் ஈர்க்கப்பட்டு இந்த புத்தகம் எழுதினேன்” என்று கூறியுள்ளான்.