மின்சார உற்பத்தி, உரங்கள் தயாரிப்பு, வாகங்களுக்கான CNG தயாரிப்பு ஆகியவற்றுக்கு எரிவாயு பயன்படுகிறது. தற்போது அதன் விலை 40% உயர்ந்துள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வால், இந்தியாவிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே வரலாறு காணாத விலையேற்றமாகவும் கருதப்படுகிறது. மேலும், கடந்த ஏப்ரல் 2019 க்குப் பிறகு, மூன்றாவது முறை எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எரிவாயு விலையேற்றதால், அதை சார்ந்துள்ள CNG, PNG போன்றவற்றின் விலைகளும் உயரும் என்று கூறப்படுகிறது.
நாட்டில் ஏற்கனவே உள்ள பழைய எண்ணெய் வயல்களில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயு, மொத்த எரிவாயு அளவில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். தற்போது, அதன் விலை, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூநிட்டுக்கு 6.1 இல் இருந்து 8.57 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் புதிய எண்ணெய் வயல்களில் இருந்து தயாரிக்கப்படும் எரிவாயுவின் விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூநிட்டுக்கு 9.92 இல் இருந்து 12.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த வருடத்தில் எல்பிஜி, சிஎன்ஜி, பிஎன்ஜி ஆகியவற்றின் விலைகள் 70% உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, எரிவாயு விலை உயர்ந்துள்ளதால், இவற்றின் விலைகளையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக, ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களின் முதல் தேதிகளில், இந்திய அரசு ,எரிவாயு விலையில் திருத்தம் கொண்டு வரும். தற்போது, கொண்டுவரப்படும் திருத்தம் ஜூலை 2021 முதல் ஜூன் 2022 வரையிலான சராசரி எரிவாயு விலையின் அடிப்படையில் அமையும். இந்த காலகட்டத்தில் எரிவாயு வேலை உச்சத்தை தொட்டிருந்தது. எனவே, தற்போதைய நிலையில், LPG, CNG, PNG ஆகியவற்றின் விலைகளை உயர்த்த வேண்டி வரும். ஆனால், விலையை உயர்த்துவதால், பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுவதால், நிபுணர் குழுவுடன் அரசு ஆலோசிக்க உள்ளது. அத்துடன், சமையல் எரிவாயு, உரங்கள் போன்றவற்றுக்கு அரசாங்கம் அளிக்கும் மானியமும் பாதிக்கப்படும். எனவே, தொலைநோக்கு பார்வையுடன் எதிர்கால நன்மையைக் கருத்தில் கொண்டு, விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.