பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இதுவரை நான் 400 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் காய்ச்சல் பாதிப்பு அடைந்துள்ளனர். அதில் 12,6502 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.