சாலைகளை பராமரிக்க ரூபாய் 4000 கோடி ஒதுக்கீடு

கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 4000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நான்காவது நாளான இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் தொடர்ந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஊரக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இன்றி சாலைகள் மேம்பாட்டை தமிழக அரசு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். […]

கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 4000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நான்காவது நாளான இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் தொடர்ந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ஊரக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இன்றி சாலைகள் மேம்பாட்டை தமிழக அரசு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதேபோல் 3 ஆண்டில் 16,000 கிலோ மீட்டர் சாலை மேம்பால பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கிராம, ஊராட்சி சாலைகளை மேம்படுத்த நான்காயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள 10000 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu