மணிப்பூரில் 4,000 தற்காலிக வீடுகள் உடனடியாக கட்டித் தரப்படும் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உறுதி அளித்துள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில்(எஸ்டி) இடம்பெறுவது தொடர்பாக அந்த சமூகத்தினருக்கும் அவர்களுக்கு எதிரான குகி மற்றும் நாகா சமூகத்தினருக்கும் இடையே மோதல் மூண்டது. ஒரு மாதமாக நடைபெறும் மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இடம்பெயர்ந்து வரும் மக்களை தங்க வைக்க 35-க்கும்மேற்பட்ட நிவராண முகாம்களை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறுகையில், மாநிலத்தில் அமைதி திரும்பும் வரை நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு 3,000-4,000 தற்காலிக வீடுகளை கட்டித் தர அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இரண்டு மாதங்களுக்குள் நிவாரண முகாம்களில் உள்ளவர்களை தற்காலிக வீடுகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அங்கு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.