ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறையில் கைதிகள் இடையே கலவரம் ஏற்பட்டது. அதில் 41 பெண் கைதிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
ஹோண்டுராஸ் தலைநகர் தெகுசிகல்பா அருகே தமரா பகுதியில் மகளிர் சிறை உள்ளது. இந்த சிறையில், பெண் கைதிகள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், சிறையில் உள்ள மகளிர் கைதிகள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 41 கைதிகள் உயிரிழந்தனர் என செய்தி வெளியானது.
இதுபற்றி கூறிய பாதுகாப்பு துறை துணை மந்திரி ஜூலிஸ்சா வில்லானுவா . இத்தகைய சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் இதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்தது. அதில், ஆண்கள் மட்டுமே உள்ள சிறைகளில் ஏற்பட்ட மோதலில் 40 கைதிகள் உயிரிழந்தனர் என்று கூறினார்.