தெலுங்கானா, இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
தெலுங்கானா அரசு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற முயற்சி செய்யப்படுவதாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இதற்காக பிரதமர் மோடியை அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்திக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் எடுத்துச் சொல்வேன் என்றும் அவர் கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36% என்பதால், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.