சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த நான்கு வாரங்களாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.














