மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இன்னும் 450 காலி பணியிடங்கள் உள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இரண்டு கட்டமாக கலந்தாய்வுகள் முடிந்துள்ளது இதை தவிர நிர்வாக ஒதுக்கீடு இடங்களையும் கல்வி ஆணையம் நிரப்பி வருகிறது. எம்பிபிஎஸ், பி டி எஸ் போன்ற இடங்கள் நிரம்பி விட்டன. 2 ஆம் கட்ட கலந்தாய்வில் கல்லூரியில் சேராமல் இருக்கும் மாணவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பின்னர் மீண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்ப வழி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரியில் 10 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 450-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதுவரை நாடு முழுவதும் 51 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 7922 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இங்கு அதிக கட்டணம் வசூலிக்கபடுவதால் இடங்கள் நிரம்ப வில்லை என்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள 450 இடங்களை நிரப்ப மூன்றாம் கட்ட கலந்தாய்வு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.