45-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் வெற்றி பெற்றுள்ளது
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய பெண்கள் அணி அர்மேனியாவை 2½-1½ என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பெண்கள் அணியின் திவ்யா தேஷ்முக், அர்மேனியாவின் எலினாவை தோற்கடித்தார், மற்ற வீரர்கள் ‘டிரா’ கண்டனர். ஆண்கள் பிரிவில், இந்திய அணி ஹங்கேரியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. தமிழக வீரர்கள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா, தங்கள் ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றனர்.