சென்னையில் முதன்முறையாக 1000 அரங்குகளுடன் பிரமாண்ட புத்தக கண்காட்சி இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 46-வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று முதல் தொடங்கி 22-ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
40-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ள நிலையில் புத்தகக் கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 200 புதிய அரங்குகளுடன் மொத்தம் 1000 அரங்குகளாக அமைக்கப்பட்டு அவை திறந்துவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.