கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படை விரட்டியடித்து உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 118.76 அடியாக உள்ளது.
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடைவிதித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.