ரஷ்யாவில் அமைந்துள்ள உறைந்த ஏரியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 48500 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாம்பி வைரஸை பிரெஞ்சு விஞ்ஞானிகள் உயிர்பித்துள்ளனர். இந்த ஜாம்பி வைரசால், தாவரங்கள், மிருகங்கள் மற்றும் மனிதர்கள் நோய்வாய்ப்பட்டால், எதிர்காலம் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
உலகளாவிய புவி வெப்பமயமாதலால், வட துருவங்களில் உள்ள உறைந்த பகுதிகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால், அந்தப் பகுதிகளில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உறைந்து போன நுண்ணுயிரிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து உள்ளன. அவ்வாறு, மீண்டும் உயிர்ப்புற்ற நுண்ணுயிரி ஜாம்பி வைரஸ் ஆகும். சைபீரிய பகுதியில் இது கண்டறியப்பட்டது. இதே பகுதியில் 2013 ஆம் ஆண்டு மற்றொரு வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, உறைந்த பகுதிகளின் அடியிலிருந்து பல கிருமிகள் கண்டறியப்படுவதால், எதிர்காலத்தில் கொரோனா போன்று பல புதிய நோய்கள் சகஜமாக பரவும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.