இந்தியாவில் 5¾ கோடி பேர் பூஞ்சை தொற்றால் பாதிப்பு

January 5, 2023

இந்தியாவில் 5¾ கோடி பேர் பூஞ்சை தொற்றால் பாதித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பூஞ்சை தொற்று அடிக்கடி காணப்படுகிறது. முதல் முறையாக நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு பூஞ்சை நோய் குறித்த பாதிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் நாடு முழுவதும் 5 ,72, 50,826 பேர் பல்வேறு வகையான கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 4.4 சதவீதம் ஆகும். பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2.4 […]

இந்தியாவில் 5¾ கோடி பேர் பூஞ்சை தொற்றால் பாதித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பூஞ்சை தொற்று அடிக்கடி காணப்படுகிறது. முதல் முறையாக நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு பூஞ்சை நோய் குறித்த பாதிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் நாடு முழுவதும் 5 ,72, 50,826 பேர் பல்வேறு வகையான கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 4.4 சதவீதம் ஆகும்.

பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2.4 கோடி பெண்கள் பிறப்புறுப்பு தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைப்போல டினியா கேப்பிட்டிஸ் எனப்படும் முடிப்பூஞ்சை தொற்றால் இதே எண்ணிக்கையிலான பள்ளி செல்லும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஆண்டொன்றுக்கு காசநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 லட்சத்துக்கு மேல் உள்ள நிலையில், பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் அனிமேஷ் ராய் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu