5ஜி-யை அமல்படுத்த தயாராக இருங்கள் - தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

August 19, 2022

தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தயாராக வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெற்றது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72,000 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது. மொத்தமாக ரூ.1.5 […]

தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தயாராக வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெற்றது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72,000 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது.
மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.87,947 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏர்டெல் ரூ.43,040 கோடிக்கும், வோடஃபோன் ஐடியா ரூ.18,786 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்தன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தியாவில் விரைவில் 5ஜி பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். மேலும், 4ஜியை விட 5ஜியின் வேகம் பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதையடுத்து 5ஜி சேவையை விரைவிலே மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஏர்டெல் மற்றும் ஜியோ இம்மாத இறுதியில் முதற்கட்ட 5ஜி வெளியீட்டை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்கள் ஏலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கான தவணை ரூ.8,312 கோடியை இப்போதே செலுத்தி விட்டது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கடிதத்தை தொலைத்தொடர்புத் துறை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கூறுகையில், ‘‘பணம் செலுத்திய சில மணி நேரங்களிலே அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதம் எங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. என் அனுபவத்தில் இவ்வளவு விரைவாக ஒதுக்கீடு கடிதம் வழங்கப்பட்டது இதுவே முதல்முறை.
தொழில்துறை கட்டமைப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மாற்றம்தான் இந்தியாவை வளர்ந்த நாடாக ஆகச் செய்யும்’’ என்று தெரிவித்தார்.
ஜியோ நிறுவனம் ரூ.7,865 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.1,680 கோடி, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.19 கோடி தவணைத்தொகை செலுத்தியுள்ளன. இதுவரையில் தொலைத்தொடர்புத் துறைக்கு 5ஜி கட்டணமாக, நிறுவனங்கள் மொத்தமாக ரூ.17,876 கோடி வழங்கியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu