5 ஆயிரம் ரஷ்யர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது

August 23, 2022

உக்ரைன் மோதலுக்குப் பிறகு சுமார் 5,000 ரஷ்யர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிகாரி கூறுகையில், "பிப்ரவரி 24, 2022 முதல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக கிட்டத்தட்ட 5,000 நபர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. கிரெம்ளின் அதிகாரிகள் மற்றும் அவர்களின் செயல்பாட்டாளர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் உட்பட செலவுகளை விதிக்க அமெரிக்க நடவடிக்கை எடுத்திருந்தது. ரஷ்யாவின் படையெடுப்பில் ஈடுபட்டவர்களை நாங்கள் தொடர்ந்து அடையாளம் காண்போம். […]

உக்ரைன் மோதலுக்குப் பிறகு சுமார் 5,000 ரஷ்யர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிகாரி கூறுகையில், "பிப்ரவரி 24, 2022 முதல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக கிட்டத்தட்ட 5,000 நபர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. கிரெம்ளின் அதிகாரிகள் மற்றும் அவர்களின் செயல்பாட்டாளர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் உட்பட செலவுகளை விதிக்க அமெரிக்க நடவடிக்கை எடுத்திருந்தது. ரஷ்யாவின் படையெடுப்பில் ஈடுபட்டவர்களை நாங்கள் தொடர்ந்து அடையாளம் காண்போம். மேலும் அவர்களின் நடத்தையின் பாதிப்பை உணர்த்தி அதற்கு பொறுப்பேற்க வைப்போம்.

ரஷ்யாவின் எதிர்ப்பாளர்கள் அல்லது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படக்கூடிய பிறருக்கான அடைக்கலத்தை அமெரிக்கா வழங்கும். ரஷ்ய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் உக்ரைனில் அதன் கொள்கைகள் மற்றும் ரஷ்யாவின் மக்களுக்கு இடையே ஒரு எல்லை கோட்டை ஏற்படுத்துவது முக்கியம் என்பதை நாங்கள் தெளிவாக உணர்கிறோம்.

அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் ஆகஸ்ட் 18 அன்று வெளியுறவுத் துறை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது உக்ரைனின் அணுசக்தி நிலையங்களில் அல்லது அதற்கு அருகாமையில் உள்ள அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு மாஸ்கோவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. உக்ரைன் மீதான அதன் போர் தீவிரமடைவதற்கு எதிராக அமெரிக்கா ரஷ்யாவை எச்சரித்தது. சபோரியா அணுமின் நிலையத்தின் முழு கட்டுப்பாட்டையும் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு திரும்ப வழங்க வலியுறுத்தியது.

உக்ரைன் அரசின் மீதும், உக்ரேனிய மக்கள் மீதும், உக்ரைனின் சுதந்திரம், அதன் ஜனநாயகம், அதன் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீதும் ரஷ்யா தனது மிருகத்தனமான தாக்குதல்களை தொடர்வதாக அவர் குற்றம் சாட்டினார். உக்ரேனிய மக்களுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு இதுவரை சுமார் 10 பில்லியன் டாலர்கள் தந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu