இந்தோனேசியாவில் 5.6, பாகிஸ்தானில் 4.3 என்று ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று காலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. மேலும் இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207 கி.மீட்டர் தொலைவில் 131 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி அலை உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.