வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் - பெங்களூருவில் 5 பேர் கைது!

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அப்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 17, 18 ஆம் தேதிகளில் 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டின் 50 க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பெங்களூருவில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். […]

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அப்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 17, 18 ஆம் தேதிகளில் 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டின் 50 க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பெங்களூருவில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பெங்களூர், மங்களூர் - யைச் சேர்ந்த 10 பேர் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதனை எடுத்து சையத் சோஹைல், உமர் , ஜுனைத்,முதாஷிர், ஜாகித் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 5 பேரும் பெங்களூர் மத்திய சிறையில் இருந்த போது தீவிரவாதி டி.சி நசீருடன் தொடர்பு கிடைத்து அதன் மூலம் ஜமாத் இ இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 5 செல்போன்கள், மூன்று மடிக்கணினி, இரண்டு வாக்கி டாக்கி, ஒரு துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தச் சதியில் இன்னும் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu