துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் இப்படி அகதிகள் தப்பி சென்ற 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது. அதேபோல் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 6 குழந்தைகள் உள்பட 47 பேர் மாயமாகி உள்ளனர். மேலும் 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.