உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

April 25, 2023

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அனுமதி அளித்தார். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி […]

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அனுமதி அளித்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தகவல் தெரிவித்துள்ளார். சஞ்ஜீவ் கண்ணா, ரவீந்தர்பட், ஜே.பி.பர்திவாலா, அனிருத்தா போஸ், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்ற த்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu