வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல், 5 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மும்பை - கோவா, பாட்னா - ராஞ்சி, போபால் - ஜபல்பூர், பெங்களூரு - ஹுப்ளி, போபால் - இந்தூர் ஆகிய 5 வழித்தடங்களில் புதிய வந்ததே ரயில்கள் இயக்கப்படும் எனவும், பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக ரயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பார் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் துவக்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை - கோவா வந்தே பாரத் ரயில் கடந்த வாரம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால், ஒடிசா ரயில் விபத்து காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தற்போது, ஒரே நாளில் 5 ரயில்கள் துவக்கப்பட உள்ளன.