தெலுங்கானா மாநிலத்தில் கடும் வெப்பத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் கடும் வெப்பத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்மல் மாவட்டத்தில் துக்க நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் வாசித்த சங்கர் (48) மற்றும் ராஜூ (42) ஆகியோர் வீட்டிற்கு திரும்பியபோது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இருவரும் பலியாகினர். கரீம் நகர் மாவட்டத்தில் நெல்லு உலர்த்திய ஜல்லம்மா (59), அடிலாபாத் மாவட்டத்தில் நெல் அறுவடை செய்த சவான் கேசவ் (60), மஹபூபாபாத் மாவட்டத்தில் நெல் விற்பனைக்கு சென்ற பிரேமலதா (60) ஆகியோர் வெயிலில் மயங்கி உயிரிழந்தனர். ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலமெங்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற வெளிவிடயங்களை தவிர்க்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.














