டெல்லி குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கவுள்ளது.
இதுபற்றி விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. கடற்படையின் ஐஎல்-38 விமானம் முதல் முறையாக கலந்து கொள்கிறது.
முதல்முறையாக குடியரசு தின விழாவில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறவர்களுக்கு, அழைப்புகள் ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பாக இந்த விழாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுண்டு. தற்போது இந்த ஆண்டு 42 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.