சென்னையில் நடைபெற்ற பணி ஆணை வழங்கும் விழாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசு பணிக்கு 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 5278 இளநிலை உதவியாளர்கள், 5339 தட்டச்சர்கள், 1077 சுருக்கெழுத்தர்கள், 425 விஏஓ, 67 வரி தண்டலர்கள், 19 கள உதவியாளர்கள் என மொத்தம் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான பணி நியமனை ஆணை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்க முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கிடும் விதமாக 10 பேருக்கு ஆணைகளை வழங்கினார். அதில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசு பணிக்கு 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதை தவிர்த்து அரசு பணிக்கு தமிழ் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.