இன்று பூமியை நெருங்கும் 500 அடி விண்கல் - நாசா எச்சரிக்கை

December 22, 2022

இன்று சுமார் 500 அடி அகலம் உள்ள விண்கல் ஒன்று பூமிக்கு மிகவும் நெருக்கமாக வரவுள்ளது. இது ஒரு பெரிய கட்டிடத்தின் அளவை போன்றதாகும். இந்த விண்கல், பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, நாசா இந்த விண்கல் குறித்து அபாயகரமான எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று சுமார் 1.7 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த விண்கல் வரவுள்ளது. மேலும், மணிக்கு சுமார் 36969 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணிக்கிறது. இதனால், பூமியின் புவி […]

இன்று சுமார் 500 அடி அகலம் உள்ள விண்கல் ஒன்று பூமிக்கு மிகவும் நெருக்கமாக வரவுள்ளது. இது ஒரு பெரிய கட்டிடத்தின் அளவை போன்றதாகும். இந்த விண்கல், பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, நாசா இந்த விண்கல் குறித்து அபாயகரமான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று சுமார் 1.7 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த விண்கல் வரவுள்ளது. மேலும், மணிக்கு சுமார் 36969 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணிக்கிறது. இதனால், பூமியின் புவி ஈர்ப்பு விசைக்குள் இது ஈர்க்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. Asteroid 2022 UD9 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், அப்போலோ குடும்பத்தை சேர்ந்ததாகும். இது சூரியனிலிருந்து 306 மில்லியன் கிலோமீட்டர் தொலைவாகவும், 130 மில்லியன் கிலோமீட்டர் நெருக்கமாகவும் சுற்றுவட்ட பாதையில் உள்ளது. மேலும், சூரியனைச் சுற்றிவர 644 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu