பப்புவா நியூ கினியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று பப்புவா நியூ கினியாவில் பங்குணாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமேற்கு திசையில் சுமார் 153 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 170 கிலோமீட்டர் ஆழம் கொண்டதாக இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. பப்புவா நியூகினியா தென்கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பெருங்கடலோர பகுதிக்கு உட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய பகுதியில் உள்ளது.