சூடானின் கார்டூம் அருகே ஒடர்மென் நகரில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர்
2021ஆம் ஆண்டு சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், ஜெனரல் படக் அல்-பர்ஹன் தலைவராகவும், ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ துணைத்தலைவராக செயல்பட்டு வருகின்றனர். ராணுவத்துடன் அதிவிரைவு ஆதரவு படையை இணைக்க ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயன்றதால், 2023 ஏப்ரல் 15 முதல் இருதரப்புக்கும் இடையில் கடும் மோதல் தொடர்கிறது. இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட, அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். சமீபத்தில், சூடானின் கார்டூம் அருகே ஒடர்மென் நகரில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததாகவும், துணை ராணுவத்தினர் இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.