காற்று மாசு குறித்து கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில், காற்றில் கலக்கும் மாசுக்களால் ஆண்டுக்கு 57 லட்சம் உயிரிழப்புகள் நேருவதாக தெரியவந்துள்ளது.
வாகனங்களின் புகை, ஆலைகளின் புகை வெளியேற்றம் போன்ற பல காரணிகளால், 2.5 மைக்ரோனா அளவுக்கு குறைவாக உள்ள மாசுப் பொருட்கள், காற்றில் பெருமளவு கலக்கின்றன. இந்த மாசுக்களை அதிக நேரத்திற்கு சுவாசிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் 42 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர் என்று உலக சுகாதார மையம் முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வில் இந்த எண்ணிக்கை 57 லட்சமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை, பிஎம் 2.5 என்ற அளவு ஆபத்து இல்லாததாக கருதப்பட்டு வந்தது. ஆனால், இது உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையில் பெரும் அபாயத்தை உண்டுபண்ண வல்லது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.