இந்தியாவில் புதிதாக 5,880 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,880 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 7-ந்தேதி 6,049 ஆகவும், 8-ந்தேதி 6,155 ஆகவும் இருந்த நிலையில் நேற்று 5,357 ஆக குறைந்தது. தற்போதைய நிலவரப்படி 35,199 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லி, இமாச்சலபிரதேசத்தில் தலா 4 பேர், குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் தலா ஒருவர் மற்றும் கேரளாவில் விடுபட்ட 2 மரணங்கள் என மேலும் 14 பேர் இறந்துள்ளனர்.