இந்தியாவில் முதல்முறையாக, காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிப்பு

February 11, 2023

இந்தியாவில் முதல்முறையாக காஷ்மீர் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ஆம் ஆண்டுகளில், இந்திய புவியியல் ஆய்வு மையம் நடத்திய நாடு தழுவிய ஆராய்ச்சியில், இந்தியாவின் 10 மாநிலங்களில், தங்கம், லித்தியம், மாலிப்டினம் உள்ளிட்ட பல கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பகுதியாக, காஷ்மீரில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுரங்கத்துறை தெரிவித்துள்ளது. லித்தியம் என்ற கனிமம் சர்வதேச அளவில் மிகவும் முக்கியம் வாய்ந்தது. குறிப்பாக, கைபேசிகள், […]

இந்தியாவில் முதல்முறையாக காஷ்மீர் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-19ஆம் ஆண்டுகளில், இந்திய புவியியல் ஆய்வு மையம் நடத்திய நாடு தழுவிய ஆராய்ச்சியில், இந்தியாவின் 10 மாநிலங்களில், தங்கம், லித்தியம், மாலிப்டினம் உள்ளிட்ட பல கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பகுதியாக, காஷ்மீரில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.

லித்தியம் என்ற கனிமம் சர்வதேச அளவில் மிகவும் முக்கியம் வாய்ந்தது. குறிப்பாக, கைபேசிகள், கணினிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் லித்தியம் அத்தியாவசிய மூலப்பொருளாக உள்ளது. மேலும், இது உலகில் வெகு சில பகுதிகளில் மட்டுமே கிடைப்பதால், இதற்கான தேவை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் அதிக அளவு லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இது சர்வதேச அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த மின்சார வாகனங்களுக்கு உலக நாடுகள் மாறிவரும் சூழலில், இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu