ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

January 23, 2023

இன்று, இந்திய கடற்படைக்கு ஐ என் எஸ் வகிர் என்ற நீர் மூழ்கிக் கப்பல் அர்ப்பணிக்கப்பட்டது. இது கல்வாரி திட்டத்தில் வடிவமைக்கப்படும் 5வது நீர் மூழ்கிக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இதுவரை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்களில் குறைந்த காலத்தில் வடிவமைக்கப்பட்ட கப்பல் இதுவாகும். மேலும், 24 மாதங்களில் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களில் இது மூன்றாவதாகும். மும்பை கடற்படை தளத்தில், தலைமை கடற்படை நிர்வாகி ஆர். ஹரிக்குமார் தலைமையில் இந்த நீர் […]

இன்று, இந்திய கடற்படைக்கு ஐ என் எஸ் வகிர் என்ற நீர் மூழ்கிக் கப்பல் அர்ப்பணிக்கப்பட்டது. இது கல்வாரி திட்டத்தில் வடிவமைக்கப்படும் 5வது நீர் மூழ்கிக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இதுவரை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்களில் குறைந்த காலத்தில் வடிவமைக்கப்பட்ட கப்பல் இதுவாகும். மேலும், 24 மாதங்களில் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களில் இது மூன்றாவதாகும். மும்பை கடற்படை தளத்தில், தலைமை கடற்படை நிர்வாகி ஆர். ஹரிக்குமார் தலைமையில் இந்த நீர் மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 12, 2020 ஆம் ஆண்டு, இந்தக் கப்பல் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த வருட பிப்ரவரி மாதத்தில் தனது முதல் கடற் பயணத்தை இந்த நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கியது. பல்வேறு பரிசோதனைகளைக் கடந்து, கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிநவீன சோனார், ரேடார் போன்ற தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதால், இந்த நீர் மூழ்கிக் கப்பல் மூலம் இந்திய கடற்படையின் வலிமை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து தகுதிகளையும் இந்த நீர்மூழ்கி கப்பல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu